`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள் | Kargil nager people fight for home from government who were affected in tsunami

Share

சுனாமியில பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கப்பட்ட வீடுகள் எங்கள்ல பலருக்கும் 21 வருஷமாகியும் வரல. 21 ஆண்டுகளா ஆயிரக்கணக்கான மனுக்கள கலெக்டர், மீன்வளத்துறை, முதல்வர், குடிசை மாற்று வாரியம்னு கால் தேய தேய அலஞ்சி குடுத்துட்டு இருக்கோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய வீடுகள் இன்னும் வரல.

எங்கள்ல பலர் பிளாட்பாரம், குடிசை வீடு, வாடக வீடுனு வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த அவலங்களை முன்வைத்து பலகட்ட போராட்டங்கள நடத்திடு இருக்கோம். சுனாமிய தொடர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல குடிசை வீட்டுல இருந்தோம், அங்க தீ விபத்து ஏற்பட்டு அப்புறப்படுத்தப்பட்டடோம். அதே இடத்துல தான் இப்போ 15 மாடி குடியிருப்பு கட்டி இருக்காங்க.

நாங்க பல முறை போராடுனத தொடர்ந்து அதுல எங்களுக்கும் வீடு ஒதுக்கி இருந்தாங்க. ஆனா, 6 லட்சம் பணம் கட்டனும்னு சொன்னாங்க. அதையும் ஒப்புக்கொண்டு, 50,000 முன்பணம் கட்டுனோம். மாதம் 2000 என்ற தவணை முறையில மீதி பணத்த வீடு கொடுத்ததும் கொடுப்பதா மனு கொடுத்தோம். வீடு கட்டி முடித்த பின் முன்னிரிமை கொடுக்கப்படும்னு சான்றிதழ் கொடுத்தாங்க.

ஆனா வீடு கட்டி முடிந்த பின்னும் வீடு கொடுக்காம 6,00,000 மொத்தமாக கேக்குறாங்க, அதுக்கு எங்களுக்கு வசதி இல்லனு முறையிட்டப்போ, வங்கில லோன் வாங்க சொன்னாங்க, வங்கில லோன் வாங்க போனா மாதம், 7000 ரூபா கேக்குறாங்க, இன்னும் வீடே தரல. ஆனா வங்கியிலருந்து லோன் காசு கேக்க வந்துட்டாங்க. வங்கியில பணம் கட்ட நாங்க தயாரா இல்ல, வாரியத்துல கட்டிக்கிறோம். எங்களுக்கு உடனே வீடு வழங்கனும்.” என்று நிலவரத்தைச் சொன்னார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com