ஊதுபத்தி புகையை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? ஆய்வில் புதிய தகவல்

Share

ஊதுபத்தி, உடல் நலம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கோட்டேரு ஸ்ரவாணி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

விழாக்காலங்களில் பலரும் வீடுகளில் நறுமணம் கொண்ட ஊதுபத்திகளை ஏற்றுவார்கள்.

இந்த ஊதுபத்தியிலிருந்து வரும் புகை மற்றும் மணம் பலருக்கும் உடல்நல பிரச்னைகளை ஏறுபடுத்துவதாக பல்வேறு அறிவியல் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், நுரையீரல் நிபுணர் சோனியா கோயல் ஊதுபத்தியிலிருந்து வெளியாகும் புகையை தினமும் சுவாசித்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என விளக்கினார். ஊதுபத்திகள் நுரையீரலை மெல்லக் கொல்லும் விஷம் என அவர் எச்சரித்தார்.

ஊதுபத்திகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை, நாளடைவில் நுரையீரல்களை பாதிக்கும் என்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருக்கும்போது நாம் சுவாசிக்கும் புகையை போன்று இதுவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com