அப்ரிடியின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா: இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் கூறுவது என்ன?

Share

அப்ரிடி - ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஷாஹித் அப்ரிடியின் சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.

இருப்பினும், யாருடைய சிக்ஸர்கள் அணிக்கு அதிகம் பலன் கொடுத்தது, எத்தனை இன்னிங்ஸ் மற்றும் பந்துகளில் இவை அடிக்கப்பட்டன என்ற விவாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில்தான் ரோஹித் ஷர்மா அப்ரிடியின் சாதனையை முறியடித்தார்.

ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் அவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்திருந்தார். மேலும், விராட் கோலியுடனான பார்ட்னர்ஷிப்பில் இருவரும் 136 ரன்களை குவித்தனர்.

அப்ரிடியின் 15 ஆண்டுகால சாதனை

இதுவரை 277 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரோஹித் ஷர்மா, 269 இன்னிங்ஸ்களில் 352 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com