Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி | India Defeat Chinese Taipei 35–28 to Retain Women’s Kabaddi World Cup; Create Historic Back-to-Back Triumph

Share

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்தது இந்திய மகளிர் அணி. லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஈரானை 33–21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கெத்தாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதற்கு இணையாக சீன தைபெய் அணியும் தோல்வியே இல்லாமல், அரையிறுதியில் வங்காளதேசத்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தத் தொடர்தான், மகளிர் கபடி வரலாற்றில் நடந்த இரண்டாவது உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், 2012-ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றன. அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி முதல் கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. இப்போது இரண்டாவது முறையும் கோப்பையை நம் பெண்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்!

(சீனா தைபெய் என்பது தைவான் நாட்டின் விளையாட்டு அணிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயராகும்.)

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com