இதனை அறிந்ததன் மூலம் அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா, வேலம்மாள் மருத்துவமனையுடன் ஒரு காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி வைத்துள்ளார். அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 66 வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சரியாகிவிட்டனர்.
வேலம்மாள் மருத்துவமனை விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சேவைகள் வழங்கியிருந்தாலும், அதில் கபடி வீரர்கள் அதிகமாக உள்ளனர்.

விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை; அப்படி யாரும் பார்த்ததும் இல்லை, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். கபடி வீரர்களுக்கு இலக்கு மற்றும் ஒழுக்கம் முக்கியம்.
தேசிய அளவில் விளையாடப்படும் கபடியை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. “தமிழகத்திற்காக 11 முறை விளையாடி 8 முறை பதக்கம் வென்றுள்ளேன். கிரிக்கெட்டிலும் பெண்கள் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.