நாங்கள் செய்யாத விஷயத்திற்காக என் பெற்றோரை இழுத்து மிகவும் வேதனை தந்தது; மனம் திறந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் | Jemimah Rodrigues opens up about how it hurt her parents to drag her down for something they didn’t do

Share

அந்த நேர்காணலில் ஜெமிமா, “உண்மையில் அது எப்போது நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. அதை எதிர்கொள்வது என்னுடைய விஷயம். ஆனால், நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோரை அதில் இழுத்தது மிகவும் வேதனையாக இருந்தது.

அந்த நேரத்தில் நாங்கள் செய்தவை அனைத்தும் விதிமுறைகளின்படிதான் இருந்தது. அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருந்தன.

ஆனால் எனக்கெதிராகவும் என் குடும்பத்துக்கெதிராகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

துபாயில் நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்தது. அந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை.

தனிப்பட்ட முறையில் என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் ஆடாததால் மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.

அந்த சமயத்தில் திடீரென்று செய்திகளில் மக்கள் என்னைப் பற்றி, என் குடும்பம் மற்றும் சர்ச் பற்றி மோசமான விஷயங்களைச் சொல்வதைப் பார்த்தேன். அது என்னை நொறுக்கியது.

அழுதேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அடி மேல் அடியை உணர்ந்தேன்” என்று கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com