“பாகிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது” எனப் பேசியிருக்கிறார் அவர்.
“தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் கூடு’ என அழைக்கப்படும் பாகிஸ்தான், நீண்ட நாட்களாக தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் தற்போது அவர்கள் நாட்டிலேயே தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதனால் இந்தியா மீது பழிசுமத்துவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
தீவிரவாத தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புதான் காரணம் எனக் கூறுகிறது பாகிஸ்தான் அரசு. இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு ஆதரவு அளிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசு இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் பாகிஸ்தான் விமர்சிக்கிறது.