நமோரோடுகுனன்: ஆதி மனிதனின் கல் கருவி 3 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் இருந்ததா?

Share

ஆதி மனிதர்கள், தொல்பொருள் ஆய்வு, வடமேற்கு கென்யா, கல் கருவிகள்

பட மூலாதாரம், David Braun

படக்குறிப்பு, இவை சாதாரண கற்களைப் போல தோன்றலாம், ஆனால் அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன கருவிகளாக இருந்தன, அவை மிகுந்த திறமையுடனும் துல்லியத்துடனும் செய்யப்பட்டன.

வடமேற்கு கென்யாவில் நடந்த ஒரு தொல்பொருள் ஆய்வில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

நமோரோடுகுனன் என்ற தொல்பொருள் தளத்தில் 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கல் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முந்தைய சான்றுகள், ஆதி மனித கருவிகளின் பயன்பாடு ஒழுங்கற்றதாக இருந்ததாகவும், கருவிகள் அவ்வப்போது தோன்றி, பின்னர் விரைவாக பயன்பாட்டில் இருந்து மறைந்ததாகவும் தெரிவிக்கின்றன.

நமோரோடுகுனன் கண்டுபிடிப்பு, இந்த தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான தலைமுறைகள் வழியாக மனிதர்களுக்கு கடத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் முதல் கண்டுபிடிப்பாகும்.

நீண்டகாலத்திற்கு நடைமுறையில் இருந்துள்ளது

‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் பிரவுனின் கூற்றுப்படி, “இந்த கண்டுபிடிப்பு, மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலில் ஒரு தீவிரமான மாற்றத்திற்கான வலுவான ஆதாரங்களை வழங்குகிறது.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com