மகளிர் கிரிக்கெட்டில் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் கனவாக மட்டுமே இருந்த உலகக் கோப்பை நேற்று முன்தினம் நனவானது.
தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தங்களின் முதல் உலகக் கோப்பையை ஏந்த நவி மும்பையில் மோதின.
இதில், ஷபாலி வர்மா (87 ரன்கள், 2 விக்கெட்டுகள்), தீப்தி சர்மா (58 ரன்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.
இந்தியா கோப்பை வென்றது முழுக்க முழுக்க கூட்டு முயற்சி என்றாலும் அதில் முக்கியமானவர் பிரதிகா ராவல்.

லீக் சுற்றில் தனது முதல் இரு போட்டிகளில் வென்ற இந்தியா அதன்பிறகு ஹாட்ரிக் தோல்வியைப் பதிவுசெய்ததால் அரையிறுதிக்கு முன்னேறுவதே கடும் சிக்கலாகிப்போனது.
நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான சூழலில், அப்போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து 200+ பார்ட்னர்ஷிப் அமைத்து சதமும் அடித்து, இந்தியா வெற்றிபெற முக்கியப் பங்காற்றினார் பிரதிகா ராவல். இந்தியாவும் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.