மகாராஷ்டிரா: விவசாய கடன் தள்ளுபடி குறித்து அஜித் பவார் பேச்சு| Maharashtra: Deputy Chief Minister Ajit Pawar speaks on farm loan waiver

Share

மனோஜ் ஜராங்கே

அஜித் பவாரின் பேச்சுக்கு மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடுமையாக பதிலளித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் போது விவசாயிகள் அஜித் பவாரின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். எங்கள் வாக்குகள் இலவசங்கள் அல்ல என்பதை அவர் உணர வேண்டும்,” என்றார்.

மனோஜ் ஜராங்கே

மனோஜ் ஜராங்கே

மாநில வருவாய்த்துறை அமைச்சர்

முன்னதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே அளித்திருந்த பேட்டியில், “விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை, விவசாயிகளின் வங்கிக் கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பிரவின் பர்தேஷி தலைமையில் ஒரு நிபுணர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை கடுமையான கடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படும்,” என்று பவன்குலே கூறினார்.

விவசாயிகள் சங்கத் தலைவர்

முன்னதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பச்சு காடு, மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து, விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கை வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com