எங்களின் எந்த வரலாற்றையும் இந்தப் போட்டிக்குள் திணிக்க விரும்பவில்லை. இந்த இறுதிப்போட்டியை ஒரு புதிய போட்டியாக புத்துணர்ச்சியோடு அணுகவே விரும்புகிறேன். இரு அணிகளின் மீதுமே பெரிய அழுத்தம் இருக்கிறது. எந்த அணியினர் அந்த அழுத்தத்தை நிதானமாக கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.’ என்றார்.
தொடர்ந்து அவரிடம், ‘பேட் கம்மின்ஸை போல உங்களுக்கும் இந்திய ரசிகர்களை அமைத்திப்படுத்திவிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு, ‘ஆம், நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். எங்களின் வெற்றி இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தும்!’ என்றார்.