புள்ளிப் பட்டியலைச் சோதிக்கும் மழை!
நேற்றைய போட்டியில் 25 ஓவர்களில் இங்கிலாந்து அணியை 79-7 என பாகிஸ்தான் வீராங்கனைகள் கட்டுப்படுத்தியபோது மழை குறுக்கிடவே போட்டி 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
கடைசி 6 ஓவர்களில் அதிரடியாக ஆடி 54 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி 31 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் குவித்தது. டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தானுக்கு 113 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் குவித்தது.
அப்போது, மீண்டும் குறுக்கிட்ட மழை பாகிஸ்தானின் எளிதான வெற்றி வாய்ப்பைத் தடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது.

ஒருவேளை இப்போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தால் அரையிறுதிக்கான சூழலே இன்னும் கூடுதல் பரபரப்பாகியிருக்கும்.
இந்தப்போட்டி உட்பட மொத்தம் 3 போட்டிகள் மழையால் டிரா ஆகியிருக்கின்றன. இதில், இலங்கை மட்டும் இரண்டு போட்டிகளில் மழையால் பாதிப்புக்குள்ளானது.
இனிவரும் போட்டிகளில் ஒவ்வொரு அணியின் வெற்றியும் அந்தந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதோடு, மற்ற அணிகளின் அரையிறுதி வாய்ப்பையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.
எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப் போட்டியில் யார் யார் மோதுவர்கள் என்ற உங்களின் கணிப்பை கமென்ட்டில் பதிவிடுங்கள்.