“நாங்களே விஷம் கொடுத்துவிட்டோம்” – கலப்படமான இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த பெற்றோரின் வேதனை

Share

மத்திய பிரதேசம், இருமல் மருந்து கலப்படம், குழந்தைகள் உயிரிழப்பு, தமிழ்நாடு, இருமல் மருந்து சர்ச்சை

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC

படக்குறிப்பு, ஷிவானி தாக்கரேவின் (வலது) 2 வயது மகள் யோஜிதா இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்தார்

சில சமயங்களில் ஒரு காணொளி மட்டுமே ஒருவரின் கடைசிச் சிரிப்பு, கடைசி குரலாக எஞ்சிவிடுகிறது.

சிந்த்வாராவைச் சேர்ந்த ஷிவானி தாக்கரேவுக்கு, அந்த காணொளி அவருடைய இரண்டு வயது மகள் யோஜிதாவுடையது, அவர் இப்போது இந்த உலகில் இல்லை.

மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லாவின் கூற்றுப்படி, சிந்த்வாரா, பேதுல் மற்றும் பாண்டுர்ணா மாவட்டங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் இதுவரை 20 குழந்தைகள் கலப்படமான இருமல் மருந்தை (Contaminated Cough Syrup) குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் அதிகபட்சமாக சிந்த்வாராவில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் யோஜிதாவும் ஒருவர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com