விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வை அறிவிக்க தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் காரணம் எனக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான தொடரில் விளையாடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வினும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு அடுத்தபடியாக ரோ-கோ இணை களமிறங்கும் சர்வதேச போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில்தான். கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன் ரோஹித்திடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கௌதம் கம்பீரால் இந்திய அணி மோசமான கலாச்சாரத்தை நோக்கி செல்வதாக மனோஹ் திவாரி கூறியுள்ளார். விராட் அல்லது ரோஹித் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.