விஜயகாந்தை புகழ்ந்து அவரின் வாக்குகளுக்கு குறிவைக்கிறாரா விஜய்? தேமுதிக நினைப்பது என்ன?

Share

'அண்ணன்' என்று அழைக்கும் விஜய்

பட மூலாதாரம், TVK

மதுரை தவெக மாநாட்டில் விஜயகாந்தை ‘அண்ணன்’ என்று குறிப்பிட்டு விஜய் புகழ்ந்து பேசியது தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தை அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டது சந்தோஷம் தந்தாலும் அரசியல் நோக்கத்தில் அவரது பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜய் தனது பேச்சு மூலம் விஜயகாந்தின் வாக்கு வங்கிக்கு குறிவைக்கிறாரா? இதுகுறித்த பிரேமலாதாவின் விமர்சனத்துக்கு தவெக பதில் என்ன? விஜயின் தவெகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?

விஜய் பேச்சும் பிரேமலதா பதிலும்

ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் பேசிய விஜய், “எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எம்ஜிஆரைப் போன்ற குணம் கொண்ட விஜயகாந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரும் மதுரையைச் சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியாது” என்று கூறினார்.

விஜயகாந்தை தனது ‘அண்ணன்’ என்று விஜய் குறிப்பிட்டதை முதலில் வரவேற்றாலும், “விஜயகாந்த் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. லட்சம் கேப்டன்களை அவர் உருவாக்கியுள்ளார். எங்கள் வாரிசுகள் இருக்கிறார்கள், எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது வேறு யாரோ அதை வந்து பயன்படுத்திக் கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தேமுதிக ஏற்றுக்கொள்ளாது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com