“பெங்களூரு வெற்றி!’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் டாப் 2 க்குள் நுழைந்திருக்கிறது பெங்களூரு அணி. இமாலய டார்கெட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் எட்டி வென்றிருக்கிறார்கள். குறிப்பாக, பல டிராமாக்களை கடந்து கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி ஆடிய விதம்தான் அவர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.
‘கடந்தப் போட்டியின் தோல்வி!’
பெங்களூரு அணி கடந்த போட்டியையும் இதே மைதானத்தில்தான் ஏக்னா மைதானத்தில்தான் ஆடியிருந்தனர். அதில் டார்கெட் 232. ஓப்பனிங்கிலும் மிடிலும் நன்றாகத்தான் ஆடியிருப்பார்கள். ஆனால், டெத் ஓவர்களில் கடுமையாக சொதப்பியிருப்பார்கள். அந்த கடைசி 5 ஓவர்கள்தான் அவர்களிடமிருந்து வெற்றியைப் பறித்தது.