இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.
ஏற்கெனவே, 2024 உலகக் கோப்பையை வென்றபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வை அறிவித்தனர்.
இப்போது, டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருப்பதால், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடுவார்கள்.

2023-ல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு வென்ற டி20 உலகக் கோப்பையிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் இருவரும் நன்றாக விளையாடியிருந்தனர்.
இருப்பினும், 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.