சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி நேற்று (மே 12) அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோலியின் ஓய்வு முடிவு குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் சரந்தீப் சிங் பேசியிருக்கிறார்.

“சில வாரங்களுக்கு முன்பு நான் விராட் கோலியிடம் பேசினேன், இங்கிலாந்து தொடருக்கு தயாராவதற்காகக் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “இல்லை நான் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்தியா ஏ போட்டிகளில் விளையாடபோகிறேன். 2018-ல் நான் செய்ததைப் போல, வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4-5 சதங்களை அடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.