இந்திய தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு விவரித்த பெண் ராணுவ அதிகாரிகள் யார்?

Share

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த இரண்டு பெண் அதிகாரிகள் யார்

பட மூலாதாரம், Ministry of External Affairs, India

படக்குறிப்பு, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தனர்.

இந்திய ராணுவம் தனது நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டது. இந்த பதில் நடவடிக்கைக் குறித்த தகவல்களை வழங்க, இந்திய ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிகள் புதன்கிழமை காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com