ஆபரேஷன் சிந்தூருக்கு முன்… பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

Share

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி எனத் தீவிரவாதக் குழுக்களின் 9 முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

காஷ்மீர் தாக்குதல்

காஷ்மீர் தாக்குதல்

2016-ல் உரி தாக்குதலுக்கு பதிலடி:

இந்தத் தாக்குதலுக்கு முன்பாக 2016-ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் உள்ள உரி என்ற இடத்தில் இராணுவ முகாமுக்குள் புகுந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் கைக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 19 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பல தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ராணுவ ஆதரவுள்ள இடங்கள் என 6 முதல் 10-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com