வைபவ் சூர்யவன்ஷி:
ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரு செய்யாத, இனிமேல் யாரேனும் செய்வாரா என்று யோசிக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி. மிகக் குறைந்த வயதில் ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், மிகக் குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையெல்லாம் சும்மா கிடைக்காது என்றும் சொல்லும் வகையில் தனது ஐ.பி.எல் கரியரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். லக்னோவுக்கெதிரான அந்தப் போட்டியில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என 34 ரன்கள் அடித்தார். அடுத்து இரண்டாவது போட்டியில் (ஆர்.சி.பி), 2 சிக்ஸ் உட்பட 16 ரன்கள் அடித்தார்.

ஆனால், இதெல்லாம் சாம்பிள்தான், இனிமேதான் இந்தக் காளியோட ஆட்டமே ஆரம்பம்னு, தனது மூன்றாவது போட்டியிலேயே 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் என குஜராத் பவுலர்களை திணறடித்து, அனைவரையும் தன்பக்கம் திருப்பினார். இப்போட்டியில் மட்டும் 11 சிக்ஸ், 7 பவுண்டரி என 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார். கூடிய சீக்கிரம் இந்திய அணியிலும் இதே அதிரடியை அவர் காட்டக்கூடும்.
இவர்களைத் தவிர, டெல்லியின் அபிஷேக் போரல், விப்ராஜ் நிகாம், பெங்களுருவின் சுயாஷ் சர்மா, ஷேக் ரஷீத் உள்ளிட்ட Uncapped பிளேயர்ஸ் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சீனியர்களுக்கு சவால் அளிக்கும் கவனம் ஈர்த்த Uncapped பிளேயர்ஸ் பிளெயிங் 11:
வைபவ் சூர்யவன்ஷி, ப்ரியன்ஸ் ஆர்யா, ஆயுஷ் மாத்ரே, ப்ரசிம்ரன் சிங், ஆயுஷ் பதோனி, அங்கிரிஷ் ரகுவன்ஷி (இம்பேக்ட் பிளேயர்), அனிகேட் வர்மா, சாய் கிஷோர், விக்னேஷ் புத்தூர், திக்வேஷ் ரதி, வைபவ் அரோரா, அஸ்வினி குமார்.
இந்த அணிக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும், இளங்கன்று பயமறியாது என்ற இளம்படையாக இது இருக்கிறது.