தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் : செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

Share

செந்தில் பாலாஜி , பொன்முடி
படக்குறிப்பு, அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தவிர அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை மற்றும் காதித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமா கடிதம்ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர், மின்சாரத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான எஸ்.முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார். பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வனத்துறை மற்றும் காதித்துறைக்கான கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் எனவும் ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com