கல்வி நிறுவன சாதிப் பெயர்களை நீக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – இன்றைய முக்கிய செய்திகள்

Share

நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (17/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீக்காத கல்வி நிறுவனங்களில் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

“தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கி சங்க சட்டத் திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டனர். மேலும் சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com