மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீசுவதாகக் கூறினார். அதன்படி, பந்துவீச்சைத் தொடங்கிய பல்தான்ஸ் பவுலர்ஸ், 16.2 ஓவர்களில் கொல்கத்தாவை 116 ரன்களுக்குச் சுருட்டினர்.

அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைதொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணி 13 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை பவுலர் அஸ்வனி குமார் ஆட்டநாயகன் விருது வென்றார்.