எடைக் கட்டுப்பாடு:
உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, முழங்கால்கள் உள்ளிட்ட உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் மீது கூடுதல் அழுத்தத்தைத் ஏற்படுத்தும். எடை மீது கவனம் செலுத்தி உணவுகளை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் ஆகியவை இந்த நோய் சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் உதவும்.
தொடர் உடற்பயிற்சி:
தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை வலுப்படுத்துவது மூட்டுகளுக்கு எடையை சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன் கால்களை நீட்டிப் பயிற்சிசெய்வது ஆகியவை கால் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும்.
வலி இருந்தால் கவனம்: ஒருவருக்கு உடற்பயிற்சி செய்யும்போது அல்லது உடற்பயிற்சி செய்த 1-2 மணி நேரத்துக்கு மூட்டு வலி இருந்தால், மூட்டுகளுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். வலி தொடர்ந்தால், பிசியோதெரபிஸ்டை கன்சல்ட் செய்யலாம்.
உடற்பயிற்சி செய்யும்போது, மெதுவான வேகத்தில் தொடங்கி இலக்கை நோக்கி அடுத்தடுத்து முன்னேற வேண்டும். 5-10 நிமிடங்களுக்கு மென்மையான இயக்கங்களுடன், கை கால்களை நீட்டி-மடக்கி வார்ம் அப் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது தசைகள், மூட்டுகள், தசைநார்கள், தசைநாண்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. உடற்பயிற்சி, உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் மாற்றுவதற்கு மறந்துவிடக் கூடாது. இது ஒரே மூட்டுகளில் அழுத்தம் அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது. மேலும் மூட்டுகளில் காயம் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
முடிவாக…
மூட்டழற்சி அல்லது மூட்டு அசௌகரியத்தின் ஆரம்ப அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், உடனடியாக ஒரு சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது. மூட்டழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்த்ரோஸ்கோபி, ஆஸ்டியோடமி, குருத்தெலும்பு சிகிச்சை, முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வசதிகள் உள்ளன.
–டாக்டர் துரை குமார்
முடநீக்கியல் அறுவைசிகிச்சை நிபுணர்