பஞ்சாப்பில் குரு காஷி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் கபடி போட்டியில், தமிழ்நாட்டின் அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், தர்பாங்கா பல்கலைக்கழக அணிக்கும் நடைபெற்ற போட்டியில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாயிண்ட்ஸ் விவகாரத்தில் நடுவர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழக அணியின் பயிற்சியாளர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, முதல்வரும், துணை முதல்வரும் இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.