இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய செயலாளர் தேவஜித் சைகியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பாகச் செயல்படவில்லை என்றும், அதைப்பற்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஐ.சி.சி சேர்மேனாக ஜெய் ஷா பதவியேற்றதைத் தொடர்ந்து, BCCI-யின் செயலாளராக நேற்று பதவியேற்றபின் BCCI தலைமைச் செயலகத்தில் பேசிய தேவஜித் சைகியா, “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு தொடர்களில் நாம் சிறப்பாகச் செயல்படவில்லை. அடுத்து இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரும், அதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இருக்கிறது. தற்போது, இது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இருப்பினும், ஒரே சமயத்தில் ஒரு தொடரைப் பற்றிதான் சிந்திக்கவேண்டும்.