கேரளா: நடிகை ஹனிரோஸ் புகாரில் நகைக்கடை அதிபர் கைது – என்ன நடந்தது?

Share

கேரளா: நடிகை அளித்த புகாரின் பேரில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டதன் பின்னணி

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் கேரளாவின் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை பாபி தரப்பு மறுத்துள்ளது. அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஹனி ரோஸ் எடுத்துள்ள சட்டரீதியான நடவடிக்கையை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com