உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பம் செய்த துன்புறுத்தல்களை 24 பக்க அளவுக்குக் கடிதமாக எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துள்ளார்.
34 வயதான அதுல் சுபாஷ் ஏற்கெனவே அவரது மனைவியைப் பிரிந்துவிட்டார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவர், வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
சுபாஷ் வைத்திருந்த 24 பக்க கடிதத்தில் 4 பக்கம் கைப்படவும், 20 பக்கங்கள் டைப் செய்தும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு நீதி வேண்டும் என்று கோரியுள்ளார்.