ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றது பாகிஸ்தான் | Pakistan won the match against Zimbabwe in t20 cricket

Share

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 12.4 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர்களான பிரையன் பென்னட் 21, தடிவனஷே மாருமன் 16 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. பாகிஸ்தான் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளரான சூபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

58 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சைம் அயூப் 36, உமைர் யூசுப் 22 ரன்கள் சேர்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. முதல் டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி நாளை மறுநாள் (5-ம் தேதி) நடைபெறுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com