Cyclone Fengal: எங்கு, எப்போது கரையை கடக்கும்?- மதியம் 1 மணி வரை மழை நிலவரம்

Share

 புயலாக உருவானது

பட மூலாதாரம், IMD.GOV.IN

படக்குறிப்பு, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவானது

வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

”புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 140 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புதுவைக்கு அருகே கரையை கடக்கும்” என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்

இன்று (நவம்பர் 30) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com