தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் எதிர்பார்த்தது என்ன, அவர் வழங்கியது என்ன?

Share

தலைமை நீதிபதி சந்திரசூட்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நீதித்துறையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமை நீதிபதிகளில் ஒருவரான தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் (டி.ஒய். சந்திரசூட்) நவம்பர் 10-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலம் பல காரணங்களால் விமர்சனத்துக்குள்ளானது.

அவரால் நீதிமன்றம் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க முடியும், அவர் பெரும்பான்மை பலம் கொண்ட ஓர் அரசாங்கத்தை எதிர்ப்பார், சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வார், எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அவரை நம்பியவர்கள் ஏராளம்.

எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலோ என்னவோ, அவரது பதவிக் காலத்தை பலருக்கு ஏமாற்றமளித்துள்ளது. அவரது உத்தரவுகள் மற்றும் அவரது தனிப்பட்ட நடத்தை ஆகிய இரண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

அவரது உரைகள், பதவியேற்பு விழாக்கள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றின் காரணமாக, சந்திரசூட் வரலாற்றில் வேறு எந்த நீதிபதியையும் விட அதிக ஊடக கவனத்தைப் பெற்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com