இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலையை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

Share

இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2006இல் நடந்த போருக்குப் பிறகு நஸ்ரல்லா பொதுவெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார்.

கடந்த 15 நாட்களில், லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலா தனது அதிகாரக் கட்டமைப்பில் தொடர்ச்சியான இழப்புகளையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.

முதலில், செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில், ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த 1500 பேர் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் மூலம் குறி வைக்கப்பட்டனர். அதில் சில கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, இதுவரை இஸ்ரேலுக்கு எட்டாத தூரத்தில் இருந்த ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமையன்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், நீண்டகாலமாக கைக்கு எட்டாத தூரத்தில் இருந்த நஸ்ரல்லாவையும், ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகளையும் இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கண்காணித்தது, குறி வைத்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com