சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் பாஜக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
“திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தபோதே திமுக-விடம் பெரிய டிமாண்ட் வைப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தனது தேவைக்காக திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். அவரது தேவை என்ன என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

தமிழகத்தில் ஒட்டுமொத்த தலித்துகளின் கட்சி விசிக கிடையாது. பாஜக, பாமக-வை பற்றி பேச திருமாவளவனுக்கு யோக்கியதை கிடையாது.
அமெரிக்கா சென்ற முதல்வர், தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் செயல்படும் கம்பெனிகளின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் நலம் குறித்து சிகிச்சைக்காக முதல்வர் வெளிநாடு சென்றிருந்தால், அது பற்றி வெளிப்படையாக தெரிவித்து இருக்கலாம்.