இன்ஸ்பெக்டர் விசாரித்தது பாதுகாப்பு காரணங்களால் இருக்கலாம், அதை தவறு சொல்லவில்லை. ஆனால், எங்கள் தனிப்பட்ட விபரங்களை அவர் கேட்டதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் எங்களிடம் நீங்கள் உறவினர்களா, எப்படி உறவினர்கள், ஒரே வீட்டில்தான் வசிக்கிறீர்களா என்பதுபோன்று பல கேள்விகளை கேட்டார். அதுமட்டுமல்லாது எங்களை பின் தொடர்ந்து வந்து நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி எந்த ஃபிளாட்டுக்குப் போகிறோம் என்பது வரை அவர் கண்காணித்தார். அவரது கேள்வியின் முறை சரியில்லை என்பதால் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக முகநூலில் பதிவு செய்தேன். மற்றபடி அவர்மீது புகார் அளிக்க வேண்டும் என்பதோ, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோ என் நோக்கம் அல்ல” என்றார்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பிஜூ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.