ஒரு பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பராக மட்டுமல்லாது கேப்டனாகவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்காற்றிய தோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். அதன்பின் ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி சிஎஸ்கே அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்தார். நடந்த முடிந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் ஒரு சீசன் ஆடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் , தோனி நினைத்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் சில வருடங்கள் விளையாடிருக்கலாம் என்று பேசி இருக்கிறார். தோனி குறித்து பேசிய அவர், “தோனி நினைத்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் சில வருடங்கள் விளையாடி இருக்கலாம். ஆனால் எந்த இடத்தில் ஓய்வு பெற வேண்டும் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் ஓய்வை அறிவித்திருக்கிறார்.