ஒடிஷா ரயில் விபத்து: சென்னையில் கிளம்பிய சிறப்பு ரயிலில் கண்ணீருடன் சென்ற குடும்பத்தினர்

Share

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு,

உமேஷ் குமாரின் கண்களில் நீர்தேங்கியிருக்க, சென்னையிலிருந்து தம்பியைக் காணக் கிளம்புவதற்கான சிறப்பு ரயில் டிக்கெட்டை காண்பித்தார்

  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவை உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்து குறித்த எந்தவித சலனமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று காணப்படவில்லை.

ரயில் நிலைய முகப்பில் உதவி எண் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான்கு அலுவலர்கள் நான்கு தொலைபேசிகளுடன் அமர்ந்திருந்தனர். சென்னையில் இருந்து பிகார் மாநிலத்தில் உள்ள பத்ரக் மாவட்டத்திற்குச் செல்லும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு மட்டும் அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்தது.

பத்ரக் செல்லவிருக்கும் சிறப்பு ரயில் பற்றியும், அந்த ரயிலில் காயமடைந்த தங்களது உறவினர்களைச் சந்திக்க செல்லவிருக்கும் நபர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள நாம் சில மணிநேரம் அங்கு செலவிட்டோம்.

உதவி எண்ணுக்கு மொத்தம் 26 அழைப்புகள்தான் வந்திருந்தன. அதிலும் பெரும்பாலான அழைப்புகள் ரயில் ரத்தான விவரங்கள் குறித்த அழைப்புகளாக இருந்ததாக அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com