அதனைத் தொடர்ந்து அப்பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் 6 லட்சம் இழப்பீடு கோரி புகார் அளித்தார். புகாரைத் தள்ளுபடி செய்யுமாறும், 15,000 ரூபாய் இழப்பீடாக வழங்க ஒப்புக் கொள்வதாகவும் திரையரங்கு தரப்பில் கூறப்பட்டது.
பெண்ணின் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த நுகர்வோர் நீதிமன்றம், திரையரங்கின் சுகாதாரமின்மை மற்றும் அலட்சியத்தைச் சுட்டிக் காட்டியது.
அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மன வேதனை ஏற்படுத்தியதாக 40,000 ரூபாயும், வலி மற்றும் துன்பத்திற்காக 20,000 ரூபாயும், மருத்துவக் கட்டணத்திற்கு 2,282 ரூபாயும், சட்ட நடவடிக்கை செலவுகளுக்காக 5,000 ரூபாயும் தர உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை 45 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும், அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில், தீர்ப்பின் தேதியிலிருந்து ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.