தமிழ்நாடு: 12 மணி நேர வேலை: சட்டத்திருத்தத்தை நிறுத்திவைக்க அரசு சொல்லும் காரணங்கள் என்ன?

Share

ஸ்டாலின்
படக்குறிப்பு,

மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் அங்கும் பெரும்பாலான கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துறைமுருகன், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், தொழிலாளர்களின் நலன்களில் எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் உறுதியளித்தனர். இந்த நிலையில், 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com