அர்ஷ்தீப் உடைத்துப் போட்ட இரண்டு ஸ்டம்புகள்; விலை என்ன தெரியுமா?|IPL 2023: Arshdeep Singh breaks LED stumps twice in a single over

Share

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பஞ்சாப் அணி இந்த வெற்றிக்கு அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்காற்றியிருந்தார்.

போட்டியின் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா நேஹல் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய அர்ஷ்தீப் சிங், “இன்றைய போட்டியில் நன்றாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட அணியின் வெற்றிக்கு உதவியது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டெத் ஓவர்களில் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்தேன். அதற்காக என்னுடைய பந்துவீசும் கோணத்தையும், ஓடும் அமைப்பையும் மாற்றிக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com