வெளியிடங்களில் இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் உடை அணிய வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என கட்டுப்பாட்டுடன் இருப்போம். அதாவது கிட்டத்தட்ட ஒரு முகமூடியுடன்தான் வெளியில் வலம் வருவோம். மது அருந்தும்போது, மேற்குறிப்பிட்ட தடுப்பு உணர்வுகள் தளர்கின்றன.
மது அருந்திய நபருக்கு ஒருவித நம்பிக்கை கூடுவதாக உணர்கிறார். தயக்கங்கள் விலகும். அதனால் அதுவரை இல்லாத அளவுக்கு அந்த நபர் மிக இயல்பாகவும், கலகலப்பாகவும் பேசுவார். அந்த வகையில்தான் சிலர் ஆங்கிலத்தில் உரையாடுவதும்….
வழக்கமாக தமிழில் பேசுவோர், குடித்ததும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்றால், எப்போதுமே ஆங்கிலத்தில் பேசுவோர் என்ன செய்வார் என்ற கேள்வி வரலாம்.
அப்படிப்பட்ட நபரும் அப்போது கற்றுக்கொண்டு வரும் புதிய மொழியைப் பேசி, எதிராளியை கவர முயற்சி செய்வார் அல்லது அவர் செய்யத் தயங்கும் விஷயங்களை, பேசத் தயங்கும் விஷயங்களைப் பேச முனைவார்.