நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி வாகையை சூடியது. இந்த ஆட்டத்தில் பந்துவீசிய பெங்களூரு அணிக்கு முகமது சிராஜ் தனது சிறப்பானப் பங்களிப்பை அளித்திருந்தார். பவர்பிளே ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார்.
4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகனாகத் தேர்வாகி, பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றி இருக்கிறார். டூ பிளேசிஸ் 84 ரன்களை எடுத்து, ஆரஞ்சு கேப்பைக் கைப்பற்றி இருக்கிறார். ஆட்ட நாயகனாக தேர்வாகி, பர்ப்பிள் கேப்பை வென்ற முகமது சிராஜிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.