ராமநாதபுரம்: “ஆளுநருக்கு மொழிபெயர்ப்பு. பதற்றமாகவும் பெருமையாகவும் உள்ளது!”- சிலிர்க்கும் மாணவர் | The student who translated the Governor’s speech in Tamil shares his experience

Share

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பள்ளி மாணவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்படி தேவிபட்டினத்தில் நடந்த மீனவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி ஆங்கிலத்தில் பேசியதை மீனவர்களுக்குப் புரியும் வகையில் பள்ளி மாணவரான விவேகபாரதி தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார்.

மேடையில் நடுக்கத்துடன் நின்ற மாணவனை அருகில் அழைத்துப் பேசி, பதற்றத்தைப் போக்கி, மொழிபெயர்க்க வைத்தார் ஆளுநர். அவர் பேசிய அடுத்த விநாடியே அவர் என்ன பேசினார் என்பதைத் தமிழில் அழகாக மொழிபெயர்த்துக் கூறி அனைவரது பாராட்டையும் பெற்றார் மாணவர் விவேகபாரதி.

மாணவர் விவேகபாரதி

மாணவர் விவேகபாரதி

நிகழ்ச்சி முடிந்து வந்த மாணவர் விவேகபாரதியிடம் நாம் பேசினோம், “நான் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்து முடிவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். என் அப்பா தீனதயாளன் தனியார் பள்ளியில் முதல்வராக உள்ளார். நான் தமிழில் உள்ள கவிதை மற்றும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன்.‌ அதுபோக ஓவியம், மேடைப் பேச்சுகளிலும் ஆர்வம் அதிகம். கிடைக்கும் வாய்ப்புகளிலும் அதுபோன்ற போட்டிகளில் பங்கேற்றுவருகிறேன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com