அது அவர்களின் உரிமையாக இருக்கலாம். ஆனால், நமது கடமை நிதித் துறை விதியை (Finance Code) பின்பற்றுவது. அதன் அடிப்படையில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1. அதில் எந்த துறையாக இருந்தாலும், செலவு செய்யப்படாத தொகை திரும்ப பெறப்பட மாட்டாது. எனவே ஐந்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆளுநர் செலவினங்களை இந்த ஆண்டு மூன்று கோடியாக குறைத்து இருக்கிறோம். காரணம், கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதி அவர்கள் செலவு செய்யாமல் இருக்கின்றனர்.
2. ஆளுநர் நிதிகள் கணக்கில் வராமல் இருப்பதை, மத்திய அரசு தணிக்கை செய்வதற்கு முன்பாக, மாநில அரசு அதை தணிக்கை செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3.நிதி மேலாண்மையை விதிமுறைக்கு உட்பட்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சர் கையெழுத்திடுவார். அது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.