
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாடின. இந்த போட்டியின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த எதிரணி வீரரான ரவி பிஷ்னோயை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்ய முயற்சி செய்திருப்பார் ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல். அவரது அந்த தைரியம் தனக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணியின் வெற்றிக்கு ஒரே ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட ஆட்டத்தின் இக்கட்டான கட்டத்தில். அதுவும் கடைசிப் பந்தில் இதை ஹர்ஷல் செய்திருந்தார். இது ஒவ்வொரு பவுலரும் அவசியம் செய்யவேண்டுமென அஸ்வின் ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.