இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதுதவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 6 போட்டிகள் இங்கு நடைபெற இதுவரை திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கான டிக்கெட் விலைகள் வழக்கத்தை விடவும் அதிகமென்ற விமர்சனங்கள் எழுந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் வாங்குவதற்குக் காத்திருக்கின்றனர். மேலும், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளைக் கொண்டாடித் தீர்க்கக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை மெட்ரோ மற்றும் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தினர் இணைந்து ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் இலவச மெட்ரோ பயணம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.