87 இடங்களுக்கு 405 பேர் மல்லுக்கட்டல் | கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம் – சேம் கரண் அதிக விலைபோக வாய்ப்பு

Share

கொச்சி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் விளையாட உள்ளன. இந்தத் தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. 10 அணிகளிலும் 87 இடங்களில் காலியாக உள்ளன. இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேரும் அடங்குவார்கள்.

மினி ஏலத்தின் இறுதிப் பட்டியலில் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இன்றைய ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சேம் கரணை பெரும் தொகைக்கு வாங்க பல்வேறு அணிகள் போட்டியிடக்கூடும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சேம் கரண் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது 24 வயதுதான் ஆகிறது. இதனால் அவரை ஏலம் எடுக்கும் அணி நீண்டகால முதலீடாக பார்க்கும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com