5 செஷன்கள் விளையாடுவது எளிதல்ல: சொல்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Playing for 5 sessions is not easy: Gautam Gambhir

Share

மான்செஸ்டர்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி இந்​திய அணி ரன் கணக்கை தொடங்​கும் முன்​னரே 2 விக்​கெட்​களை பறி​கொடுத்த போதி​லும் கேப்​டன் ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல் ஜோடி அபார​மாக விளை​யாடி 3-வது விக்​கெட்​டுக்கு 188 ரன்​கள் குவித்​தது.

ஷுப்​மன் கில் 103 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 90 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஜோடி மிக அற்​புத​மாக விளை​யாடி இங்​கிலாந்து அணிக்கு எந்த ஒரு வாய்ப்​பை​யும் கொடுக்​காமல் அந்த அணி வீரர்​களை களத்​தில் வெகு நேரம் பீல்​டிங் செய்ய வைத்து சோர்​வடையச் செய்​தது. இந்த ஜோடி 334 பந்​துகளை சந்​தித்து 203 ரன்​களை வேட்​டை​யாடியது.

கடைசி நாள் ஆட்​டத்​தில் 15 ஓவர்​கள் மீதம் இருந்த நிலை​யில் போட்​டியை டிரா​வில் முடித்​துக்​கொள்ள இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் முன்​வந்​தார். ஆனால் இதை ஜடேஜா ஏற்​றுக்​கொள்​ள​வில்​லை. அப்​போது ஜடேஜா 90 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 85 ரன்​களை​யும் கடந்து சதத்தை நெருங்​கும் நிலை​யில் இருந்​தனர். குழு விளை​யாட்​டில் எப்​போதும் தனி​நபர் சாதனைக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கக்​கூ​டாதது​தான்.

ஆனால் இவர்​கள் இரு​வரும் போராடிய விதம் அவர்​கள், சதம் அடிக்க தகு​தி​யானவர்​கள் என்ற கருத்தே கிரிக்​கெட் ரகி​கர்​கள் அனை​வரது மனதி​லும் மேலோங்​கி​யிருந்​தது. இறு​தியாக ஜடேஜா 5-வது சதத்​தை​யும், வாஷிங்​டன் சுந்​தர் முதல் சதத்​தை​யும் நிறைவு செய்து ஆட்​டத்தை டிரா செய்​தனர். போட்டி டிரா​வில் முடிவடைந்த போதி​லும் களத்​தில் போட்​டியை பார்த்த ரசிகர்​கள் எந்த ஒரு கட்​டத்​தி​லும் சலிப்​படைய​வில்​லை. அந்த அளவுக்கு ஜடேஜா​வும் (107*), வாஷிங்​டன் சுந்​தரும் (101*) இங்​கிலாந்து அணி​யின் பந்து வீச்​சுக்கு பதிலடி கொடுத்​தனர். அதி​லும் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் வாஷிங்​டன் சுந்​தர் ஹூக் ஷாட்​டில் சிக்​ஸர் விளாசிய விதம் அற்​புத​மானது.

தோல்வி அடைவதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் இருந்த நிலை​யில் அதற்கு இடம் கொடுக்​காமல் இந்​திய அணி அற்​புத​மாக விளை​யாடி களத்​தில் இங்​கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்த விதம் பாராட்​டும் வகை​யில் இருந்​தது. இந்த போட்டி டிரா​வில் முடிவடைந்​தா​லும் இது வெற்​றிக்கு நிக​ராக கருதவேண்​டிய ஆட்​டமே.

தோல்​வி​யின் விளிம்பை எட்​டிப்​பார்க்க கூடிய இடத்​தில் இருந்து ஆட்​டத்தை டிராவை நோக்கி நகர்த்​திய இந்​திய அணி வீரர்​களின் மனரீ​தி​யான போராட்​டம் ஒட்​டுமொத்த இங்​கிலாந்து அணி​யை​யும் விரக்​திக்கு கொண்டு சென்​றது என்​று​தான் கூற வேண்​டும். இது​தான் கடைசி ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தாக அந்த அணி வீரர்​கள் நடந்​து​கொண்ட விதத்தை வெளிக்​காட்​டியது.

இந்த ஆட்​டத்​தின் முடி​வானது வரும் 31-ம் தேதி லண்​டனில் தொடங்க உள்ள கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்​பார்ப்பை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது. மான்​செஸ்​டர் போட்டி முடிவடைந்​ததும் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது, இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீரிடம், 4-ம் நாள் ஆட்​டத்​துக்கு பிறகு இந்​திய அணி வீரர்​களிடம் 2009-ம் ஆண்டு நீங்​கள் நேப்​பியரில் போராடி சேர்த்த 137 ரன்​களைப் பற்​றிக் குறிப்​பிட்டு உத்​வேகம் கொடுத்​தீர்​களா என்று கேள்வி கேட்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளித்து கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: நான் விளை​யாடிய எந்த இன்​னிங்​ஸும் நினை​வில் இல்​லை, அது வரலாறாக மாறி​விட்​டது. தற்​போது இந்​திய அணி​யில் உள்ள வீரர்​கள் தங்​களது சொந்த வரலாற்றை உரு​வாக்க வேண்​டும் என்று நினைக்​கிறேன். உண்​மை​யாக சொல்ல வேண்​டும் என்​றால், இந்த அணி​யில் யாரும் யாரை​யும் பின்​தொடரு​வது இல்​லை, அதை அவர்​கள் விரும்​புவதும் இல்​லை. வீரர்​கள் தங்​கள் சொந்த வரலாற்றை உரு​வாக்க வேண்​டும்.

இந்த வீரர்​கள் நாட்​டுக்​காக போராட விரும்​பு​கிறார்​கள், அதை அவர்​கள் தொடர்ந்து செய்​வார்​கள். 5 செஷன்​கள் வீரர்​கள் அழுத்​தத்​தின் கீழ் விளை​யாடிய உள்​ளார்​கள். இது​போன்ற சூழ்​நிலைகளில் அழுத்​தத்​தில் இருந்து வெளியே வந்து விளை​யாடு​வது எப்​போதுமே சிறப்​பான விஷ​யம். இது வீரர்​கள் மத்​தி​யில் நம்​பிக்​கையை கொடுக்​கும். இந்த செயல் திறன் ஓவலில் நடை​பெறும் போட்​டிக்கு நம்​பிக்​கையை கொடுக்​கும் என்று நம்​பு​கிறேன். ஆனால் நாங்​கள் எதை​யும் சாதா​ரண​மாக எடுத்​துக்​கொள்ள முடி​யாது.

இந்​திய அணி மாற்​றத்​துக்​கான கட்​டத்​தில் இருப்​ப​தாக நான் நினைக்​க​வில்​லை. ஏனெனில் இது இந்​திய அணி. அணியை பிர​திநித்​து​வப்​படுத்​தும் சிறந்த 18 வீரர்​கள் உள்​ளனர். அனுபவம் மற்​றும் அனுபவ​மின்மை ஆகிய​வற்​றையே கருத்​தில் கொள்ள வேண்​டும். நாங்​கள் அப்​படி​தான் பார்க்​கிறோம். முக்​கிய​மான விஷ​யம் என்​னவென்​றால் கடைசி நாளில் விளை​யாடிய விதத்​தில் இருந்து வீரர்​கள் அதி​கம் கற்​றுக்​கொண்​டுள்​ளனர். ஏனெனில் அழுத்​த​மான சூழ்​நிலை​யில் தாக்​குதல் பந்து வீச்சை கொண்ட இங்​கிலாந்து போன்ற அணிக்கு எதி​ராக 5 செஷன்​கள் விளை​யாடி 4 விக்​கெட்​களை மட்​டுமே இழந்​து போட்​டியை டிரா செய்​​வது என்​பது எளி​தானது அல்​ல. இவ்​வாறு கவுதம்​ கம்​பீர்​ கூறி​னார்​.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com