தேனி ஏலக்காய் மாலை; நல்லி பட்டு சால்வை – பிரதமருக்காக தயாரான எடப்பாடி; மோடி சொன்ன மெசேஜ்!
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தியதும்தான், தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமரை வரவேற்பதற்காக, ஒருவாரத்துக்கு முன்பாகவே தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், “முதலில், இந்தப் பொதுக்கூட்டம்…




