ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? – வனத்துறை விளக்கம்!
காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை என்பது குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது.உயிரிழந்த இளம் ஆண் புலி இதன் பின்னணி குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், “புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற முடியும். வாழிட எல்லைகளை தக்கவைத்துக் கொள்ள…



